ஆப்நகரம்

உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை வைத்து கடத்த முயற்சி: தாய்லாந்து பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்க கட்டிகளை கடத்த முயன்ற தாய்லாந்து பெண்ணை, நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Samayam Tamil 29 Mar 2019, 1:05 pm
சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்க கட்டிகளை கடத்த முயன்ற தாய்லாந்து பெண்ணை, நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
Samayam Tamil 68623491


தாய்லாந்தை சேர்ந்த கிரைசான் தம்பிராகோப் என்ற பெண் நேற்று முன்தினம் டிஜி 337 என்ற விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளார். விமானநிலைத்தில் நடைபெற்ற சோதனையில் இவர் அணிந்திருந்த பிராவினுள் 1.4 கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. இவரை கைது செய்த காவல்துறையினர் இவரிடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சென்னையில் இருக்கும் ஒருவரிடம் இந்த தங்க கட்டிகளை கொடுப்பதுதான் இவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்று கூறினார். மேலும் தங்க கட்டிகளை வாங்கும் நபர் இந்த பெண்ணின் வாட்ஸ் ஆப் புரோஃபையிள் புகைப்படத்தை வைத்து இவரை அடையாளம் கண்டுகொள்வார் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கிரைசான் தம்பிராகோப்-வை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானநிலையத்திற்கு வெளியில் அழைத்துச் சென்றனர். அப்போது சமவந்தப்பட்ட நபர் அந்த பெண்ணிடம் பேசியபோது அவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் லவ்லீன் கஷ்யப் என்று அவர் சண்டிகரை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இவர் அடிக்கடி பேங்காங் , மும்பை ,கொல்கத்தாவிற்கு பயணிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் இந்த முறை மட்டும் இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டாரா அல்லது இதை தொடர்ந்து செய்து வருகிறாரா என்று நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்ற கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி