ஆப்நகரம்

சீன அதிபருக்கு தயாராகிறது தமிழ் பாரம்பரிய உணவுகளான தக்காளி ரசம், சாம்பார்!!

சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிற்கு இன்று அளிக்கப்படும் இரவு விருந்தில் தக்காளி ரசம், அரைத்துவிட்ட சாம்பார், கடலை குருமா, கவுனி அரிசி அல்வா ஆகியவை பறிமாறப்பட இருக்கிறது.

Samayam Tamil 11 Oct 2019, 4:34 pm
சென்னையில் முறை சாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜிங்பிங் இருவருக்கும் தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகிறது.
Samayam Tamil Thakkali rasam


மாமல்லபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு மோடி, ஜிங்பிங் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். இதற்காக சென்னை வந்திருக்கும் மோடி ஏற்கனவே திருவிடந்தை சென்று அங்கிருந்து கோவளத்தில் இருக்கும் பிஷ்கோவ் ஓட்டலுக்கு சென்று இருக்கிறார்.

இதையடுத்து சென்னை வந்திருக்கும் சீன அதிபர் ஜிங்பிங் கிண்டியில் இருக்கும் ஐடிசி சோழா ஓட்டலில் சிறிது ஓய்வு எடுத்த பின்னர், மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரம் செல்லும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கும்ப மரியாதையை ஏற்றாரா சீன அதிபர் ஷி ஜிங்பிங்?

அங்கு அளிக்கப்படும் இன்றைய இரவு விருந்தில் தக்காளி ரசம், அரைத்துவிட்ட சாம்பார், கடலை குருமா, கவன அரிசி அல்வா ஆகியவை பறிமாறப்பட இருக்கிறது. செட்டிநாடு, காரைக்குடி உணவுகளும் இடம் பெறுகின்றன. அசைவம், சைவம் என இரண்டு வகையான உணவுகளும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. மாவிலை, வாழை மர தோரணை, கரும்பினால் அலங்காரம் என்று இன்றைய வரவேற்பு பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
Modi Xi Jinping Meet: சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஷி ஜிங்பிங்

இவர்களது சந்திப்பு சுமார் 6 மணி நேரம் நடக்கும். சந்திப்பு முடிந்த பின்னர் இருவரும் சேர்ந்து அறிக்கை வெளியிட மாட்டார்கள், தனியாக அறிக்கை வெளியிடுவார்கள்.

அடுத்த செய்தி