ஆப்நகரம்

வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த தொண்டர் உயிரிழப்பு!

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த ஜெகன்சிங் என்ற நபர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.

Samayam Tamil 1 Jun 2018, 11:05 am
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீ க்குளித்த ஜெகன்சிங் என்ற நபர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.
Samayam Tamil velu 2
வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த தொண்டர் உயிரிழப்பு!


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த 25-ம் தேதி தூத்துக்குடி சென்றார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் வேல்முருகனை தடுத்து நிறுத்திய போலீஸார் அவரை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனையடுத்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் விழுப்புரம் போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேல்முருகன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த தொண்டர் உயிரிழப்பு!


இதனால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை தேசத் துரோக வழக்கில் நெய்வேலி போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி, கடலூர் மாவட்டம் பெரியாண்டிகுழி கிராமத்தைச் சேர்ந்த அக்கட்சியின் பிரமுகர் ஜெகன்சிங் என்பவர் தீக்குளித்தார். உடலில் 85 சதவிகித தீக்காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெகசிங்கின் இந்த மறைவு தமிழக வாழ்வுரிமை கட்சியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி