ஆப்நகரம்

தமிழகத்தில் உருவாகி வறண்டு கொண்டிருக்கும் தாமிரபரணி ஆறு!!

தமிழகத்தில் உருவாகி தமிழகத்திற்குள் மட்டுமே ஓடிக் கொண்டு இருக்கும் தாமிரபரணி ஆறு சிறிது சிறிதாக காய்ந்து வறட்சிக்கு சென்று கொண்டு இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த நீரை நம்பி இருக்கும் மக்கள் குடிக்கக் கூட நீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

TOI Contributor 27 Mar 2017, 1:31 pm
தமிழகத்தில் உருவாகி தமிழகத்திற்குள் மட்டுமே ஓடிக் கொண்டு இருக்கும் தாமிரபரணி ஆறு சிறிது சிறிதாக காய்ந்து வறட்சிக்கு சென்று கொண்டு இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த நீரை நம்பி இருக்கும் மக்கள் குடிக்கக் கூட நீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Samayam Tamil thamirabharani in tirunelveli is drying up now
தமிழகத்தில் உருவாகி வறண்டு கொண்டிருக்கும் தாமிரபரணி ஆறு!!


தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்ல மழை பெய்து நீர் ஆதாரம் இருந்தது. இந்த நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இதற்கு காரணம் நீரை தேக்கி வைக்க போதிய அணைகள் இல்லாதது. இருக்கும் அணைகளையும் தூர்வாராதது. பதிய அணைகள் எதுவும் கட்டாதது. இதனால், தமிழகம் இன்று குடிப்பதற்குக் கூட நீர் இல்லாமல் கடுமையான வறட்சிக்கு தள்ளப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பொதிகையில் துவங்கி 125 கி. மீட்டர் பயணித்து, வளைகுடாப் பகுதியில் உள்ள தலைமன்னாரில் கடலில் கலக்கிறது தாமிரபரணி ஆறு. இது செல்லும் வழி நெடுகிலும் மக்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்தது.

நடப்பு நிதியாண்டில் இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி 83,000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களில் நெல் பயிரிடுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வெறும் 28,243 ஏக்கர் விளை நிலங்களில் மட்டுமே நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் விளைந்த நெல்லும் போதிய நீர் இன்றி பொக்கிப் போய் இருப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்று நீர் சித்தாற்றில் இருக்கும் 703 டேங்குகளில் நிரப்பப்படும். மேலும் தாமிரபரணியில் உள்ள 441 டேங்குகளிலும் நிரப்பப்படும். இவை அனைத்தும் தற்போது நீர் இன்றி வறண்டு போயுள்ளது. நெல்லுக்குப் பதில் பருத்தி போன்று வேறு விவசாயம் செய்தவர்களும், நல்ல விளைச்சல் இன்றி ஏமாற்றத்தில் உள்ளனர். மொத்தத்திற்கு தாமிரபரணியும் வறண்டு அதை நம்பி இருக்கும் நிலங்களும் வறட்சிக்கு தள்ளப்பட்டுள்ளது.

Thamirabharani in Tirunelveli is drying up now

அடுத்த செய்தி