ஆப்நகரம்

பெரியார் சிலை அவமதிப்பு: பொங்கியெழுந்த ராகுல்!

பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இது குறித்து தமிழில் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Jul 2020, 11:43 am
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் காவிப்பொடி வீசிச்சென்றதாக தகவல் அறிந்த பெரியாரிய ஆதரவாளர்கள் அப்பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil rahul gandhi reaction


இதனை தொடர்ந்து கோவையின் பல்வேறு இடங்களில் திராவிட கழகத்தினர் பெரியார் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல்: நள்ளிரவில் நடவடிக்கை!

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரியார் சிலைகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த் நிலையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காவிப் பொடி வீசிய பாரத் சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் (21) என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் இன்று சரனடைந்துள்ளார்.

மாநிலத்தில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



இதுதொடர்பான செய்தியை பகிர்ந்த அவர், “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது” என ராகுல்காந்தி தமிழில் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி