ஆப்நகரம்

மேல்முறையீடா? தேர்தலா? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 1:08 pm
Samayam Tamil thanga__14359
”ஆலோசித்து முடிவு செய்யப்படும்” தங்க தமிழ்ச்செல்வன்
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யலாமா அல்லது தேர்தலை சந்திக்கலாமா என்பது ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு கூறினார்.

இதனால் டிடிவி தரப்பினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவும், தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன்,

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாமா அல்லது இடைத்தேர்தலை சந்திக்கலாமா என்பது ஆலோசனைக்கு முடிவு செய்யப்படும். இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையில், நான் மேல் முறையீடு செய்ய மாட்டேன் என கூறியிருந்தேன், நீதிமன்றத்தில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மக்கள் மன்றத்தில் எங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது, என்று தமிழ்ச்செல்வன் பேசினார்.

அடுத்த செய்தி