ஆப்நகரம்

ஸ்டெர்லைட் மூடியதால் காப்பர் கம்பி கிடைக்க மாட்டுக்கு! அமைச்சர் வருத்தம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு பிரச்னை சீரமைக்க காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Jun 2018, 1:28 pm
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு பிரச்னை சீரமைக்க காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
Samayam Tamil thangamani


இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் கே.பி.பி சாமி பேசினார். அப்போது, திருவொற்றியூர் பகுதியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானதாக கூறினார்

இதற்கு பதிலளித்த அஐமச்சர் தங்கமணி பேசியதாவது:

திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரயில்வேலைகள், தொலைபேசி, நெடுஞ்சாலை துறை பணிகள் நடந்து வருகின்றன. அதன் காரணமாகத்தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு தாமதமாக சீரமைக்கப்படுகிறது. அதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடியது தான் காரணம். இதற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 70% காப்பர் பெறப்பட்டு வந்தது. தற்போது ஸ்டெர்லைட் மூடப்பட்டதால், காப்பர் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. அதேநேரம் ஸ்டெர்லைட்டை மட்டும் நம்பாமல், மாற்று வழிகம் மூலம் டிரான்ஸ்பார்மார்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி