ஆப்நகரம்

ஹெச்.ராஜாவை கண்டித்து, முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 19 Sep 2018, 6:42 pm
தஞ்சை: முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil Temple


சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா அவதூறாகப் பேசினார். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் ஊழியர்கள் ஹெச்.ராஜாவைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கோவில் தகவல் பலகையில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தை பற்றியும், அதில் பணிபுரியும் அலுவலர்களை பற்றியும் அவர்களுடைய குடும்ப பெண்களைப் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகள் பேசியதைக் கண்டித்து போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே கால பூஜைகள் மட்டுமே நடைபெறும். தரிசனம் மட்டுமே உண்டு. பிரார்த்தனைகள் ஏதும் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

Thanjai Sri Mullaivananathar Temple employees protest against H.Raja abuse speech.

அடுத்த செய்தி