ஆப்நகரம்

உடலில் சேற்றைப் பூசி தஞ்சையில் விவசாயிகள் நூதன போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சை விவசாயிகள் உடலில் சேற்றை பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 1 Apr 2017, 3:52 pm
தஞ்சை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சை விவசாயிகள் உடலில் சேற்றை பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil thanjavur farmers protest with applying mud
உடலில் சேற்றைப் பூசி தஞ்சையில் விவசாயிகள் நூதன போராட்டம்


தமிழக விவசாயிகள் கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். அவர்களின் குரலை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், மண்டை ஓடு, மண் சட்டி, தூக்கு கயிறு ஆகியவற்றுடன் போராட்டம் நடத்தினர். மேலும் எலிக்கறி உண்ணும் போராட்டம், பாம்புக்கறி உண்ணும் போராட்டம் போன்ற நூதன் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று தங்கள் உடலில் சேற்றை பூசியபடி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Thanjavur farmers protest with applying mud.

அடுத்த செய்தி