ஆப்நகரம்

ஜூன் 13-ல் அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல்: தேர்தல் ஆணையம்

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில் வருகிற ஜூன் 13-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 May 2016, 10:41 pm
சென்னை: அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில் வருகிற ஜூன் 13-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil thanjur aravakurichi election held on june 13th ec
ஜூன் 13-ல் அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல்: தேர்தல் ஆணையம்


தமிழகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிக அளவிலான பண விநியோகம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மூன்று வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.

அதனைத்தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு பின்னர் அந்த தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென்று ஜூன் 13-ம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாள் எப்போது என தேர்தல் ஆணையம் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி