ஆப்நகரம்

இந்தியாவிலேயே சித்த மருத்துவம் படிக்கும் முதல் திருநங்கை; தூத்துக்குடி தாரிகா

திருநங்கை தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ படிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு இடமளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 27 Nov 2017, 8:41 pm
திருநங்கை தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவ படிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு இடமளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil tharika banu becomes indias first siddha medical student
இந்தியாவிலேயே சித்த மருத்துவம் படிக்கும் முதல் திருநங்கை; தூத்துக்குடி தாரிகா


தூத்துக்குடி மாவட்டம் உலக்குடி கிராத்தைச் சேர்ந்தவர் தாரிகா பானு. இவர், பிளஸ் 1 படிக்கும் போதே, தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்து, வீட்டை விட்டு வெளியேறி, கடும் போராட்டங்களுக்குப் பிறகு பிளஸ் 2 முடித்தார்.

பின்னர், தொடர்ந்து மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு, முயன்ற அவருக்கு பல கல்லூரிகள் கதவை திறக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, தாரிகாவுக்கு சித்த மருத்துவக் கல்லூரியில் இடமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் மூலம், இந்தியாவில் சித்த மருத்துவம் படிக்கும் முதல் மாணவியாக தூத்துக்குடி தாரிகா பெயர் வாங்குகிறார்.

அடுத்த செய்தி