ஆப்நகரம்

புயலால் உயிாிழந்த நபா்களுக்கு கூடுதலாக ரூ.6 லட்சம் வழங்க முதல்வா் உத்தரவு

ஓகி புயலால் உயிாிழந்த மீனவர் அல்லாத நபா்களுக்கு கூடுதலாக ரூ. 6 லட்சம் வழங்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

TOI Contributor 13 Dec 2017, 7:01 pm
ஓகி புயலால் உயிாிழந்த மீனவர் அல்லாத நபா்களுக்கு கூடுதலாக ரூ. 6 லட்சம் வழங்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
Samayam Tamil the additional order to give rs 6 lakhs to the fishermens of the storm
புயலால் உயிாிழந்த நபா்களுக்கு கூடுதலாக ரூ.6 லட்சம் வழங்க முதல்வா் உத்தரவு


தமிழகத்தில் கன்னியாகுமாி மாவட்டம் ஓகி புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளனாது. புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விபத்துக்குள்ளாயின. கடலுக்குச் சென்ற மீனவா்கள் பலரது நிலைமை தற்போது வரை என்னவென்று உறுதிபடுத்த முடியவில்லை.

இந்நிலையில், புயல் பாதித்து உயிாிழந்த மீனவா்களுக்கு 10 லட்சம் ரூபாயும், மீனவா்கள் அல்லாதவா்களுக்கு ரூ.4 லட்சமும் நிவாரணத் தொகையாக தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகை பத்தாது என்றும், முதல்வா் நோில் வந்து மீனவா் குடும்பங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கன்னியாகுமாி மீனவா் குடும்பத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

மீனவா்களின் கோாிக்கையைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்று கன்னியாகுமாி மாவட்டத்தின் ஒருசில மீனவா் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டாா். இதனைத் தொடா்ந்து உயிாிழந்த மீனவா்களுக்கான நிவாரணத் தொகையை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயா்த்துவதாக அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து முதல்வாிடம், உயிாிழந்த மீனவா்கள் அல்லாதவா்களுக்கான நிவாரணத்தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அதனை உயா்த்தி வழங்க வேண்டும் என்றும் கோாிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட முதல்வா் உயிாிழந்த மீனவா் அல்லாதவா்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் நிவாரணமானது ரூ. 10 லட்சமாக உயா்த்தப்படுவதாக தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி