ஆப்நகரம்

தமிழகத்தில் பாஜக தனது இருப்பை காட்டிக்கொள்கிறது - அமைச்சர் பகீர்

தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பு குறித்து ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜக தனது இருப்பை காட்டிக்கொள்ள முயற்சிப்பதாகா அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Jun 2021, 7:37 pm
தமிழகத்தில் முழு ஊரடங்கை ஜூன் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நோய்த்தொற்று குறைந்துள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அரசு அனுமதி அனுமதித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்ததுடன் '' டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இன்று காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதற்கு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வினையாற்றியுள்ளார். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்துள்ள மாவட்டங்களை மட்டும்தான் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கப்ட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நோய்த்தொற்று அதிகமாக இருந்த நாட்களிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

2 பவுன் செயினுடன் மனு... முதல்வரை நெகிழ வைத்த பட்டதாரி பெண்..!

தமிழகத்தில் 36 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பு திமுக அரசின் தடுப்பு நடவடிக்கையால் பெருமளவு குறைந்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் அங்கு ஆட்சி செய்யும் பாஜக அரசு மதுக்கடைகளை திறந்துதான் வைத்துள்ளது.

மதுக்கடைகள் திறப்பதற்கு ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜக பெட்ரோல், டீசல் விலையுயர்வை எதிர்த்து ஏன் போராட்டம் செய்யவில்லை? தமிழகத்தில் தனது இருப்பை காட்டிக்கொள்ளவும், அரசியலுக்காகவும்தான் பாஜக முயல்கிறது'' என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி