ஆப்நகரம்

மதச்சார்பற்ற அணிகள் இணைந்தால் பாஜக காணாமல் போய்விடும்: புதுச்சேரி முதல்வர்

மதச்சார்பற்ற அணிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் நிலையில் உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார்.

Samayam Tamil 9 Jun 2018, 9:34 am
மதச்சார்பற்ற அணிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் நிலையில் உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார்.
Samayam Tamil Narayanasamy


புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் அணியின் உறுப்பினர் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

‘மத்தியில் ஆளும் மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மத்தியில் பாஜகவின் செல்வாக்கு குறைந்துள்ளது.
பாரதீய ஜனதா கட்சியினுடைய நிலை இப்போது, மதச்சார்பற்ற அணிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் நிலையில் உள்ளது. அதற்கு முன்னுதாரணம் தான் உத்தரப்பிரதசே மாநிலத்தில் நடைபெற்ற நான்கு பாராளுமன்ற தொகுதி தேர்தல்கள். அந்த நான்கு தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்திருக்கிறது. அதனால் தான் நரேந்திர மோடி, செல்லும் இடங்களில் எல்லாம் திட்டங்களை அறிவிக்கிறார். ஆனால், மக்கள் அவர்களை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த விடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால், இதற்கு முடிவு கட்டும் காலம் வந்து விட்டது’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி