ஆப்நகரம்

சென்று கொண்டிருந்த ரயிலிலிருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

TNN 7 Nov 2016, 12:53 pm
தாம்பரம் திரிசூலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் ஜீவா (17). தாம்பரத்தில் உள்ள சானடோரியம் மெப்ஸ்சில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பல்லாவரம் சென்று துணி வாங்கி வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
Samayam Tamil the boy was gone he fell from a train and killed
சென்று கொண்டிருந்த ரயிலிலிருந்து தவறி விழுந்து சிறுவன் பலி


பின்னர், பல்லாவரத்தில் உள்ள துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டு ரயிலில் திரும்பி வந்துள்ளார். அப்போது பல்லாவரம் – திரிசூலம் இடையே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் ஜீவாவின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி