ஆப்நகரம்

முதல்வர் திறக்கும் முன்பே அரை அடி கீழே இறங்கிய பாலம்!!

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறப்பதற்கு முன்பே பாலம் அரை அடி கீழே இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 7 Oct 2017, 1:32 pm
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறப்பதற்கு முன்பே பாலம் அரை அடி கீழே இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil the bridge has gone down before inauguration in namakkal tamil nadu
முதல்வர் திறக்கும் முன்பே அரை அடி கீழே இறங்கிய பாலம்!!


நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை வரும் 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் பாலத்தின் தார் இணைப்பு பகுதி அரை அடி ஆழத்திற்கு கீழே இறங்கியுள்ளது. தற்போது மழையும் பெய்து வருவதால் இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலத்தின் தரம் எந்தளவிற்கு இருக்கிறது போன்றவற்றை பார்க்காமல், பாலத்தை அவசர கதியில் திறப்பதற்கு அரசியல்வாதிகள் அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மழைக்கே தாங்காத பாலங்கள் நாளை வடகிழக்கு பருவ மழைக்கு எவ்வாறு தாங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

The bridge has gone down before inauguration in Namakkal, Tamil Nadu!!

அடுத்த செய்தி