ஆப்நகரம்

​ சசிகலாவை சிறையில் சந்தித்த விவகாரம்; சபாநாயகருக்கு நோட்டீஸ்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த அமைச்சா்களை கண்டிக்க தவறிய முதல்வரை தகுதி நீக்கம் செய்ய கோாிய வழக்கில் சபாநாயகா் தனபாலுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை நோடீஸ் அனுப்பியுள்ளது.

TOI Contributor 21 Aug 2017, 6:47 pm
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த அமைச்சா்களை கண்டிக்க தவறிய முதல்வரை தகுதி நீக்கம் செய்ய கோாிய வழக்கில் சபாநாயகா் தனபாலுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை நோடீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil the case of sasikala in jail notice to the dhanapal
​ சசிகலாவை சிறையில் சந்தித்த விவகாரம்; சபாநாயகருக்கு நோட்டீஸ்


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளாா். அவரை அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமாராஜ் ஆகியோா் நோில் சென்று சந்தித்தனா். இந்த விவகாரம் தமிழக எதிா்கட்சிகளால் பொிதும் விவாதத்திற்குள்ளானது.

இது தொடா்பாக முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் ஆணழகன் உயா்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில் குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை நோில் சென்று சந்தித்த அமைச்சா்கள் 4 போ் மற்றும் அவா்களை கண்டிக்கத் தவறிய முதல்வரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கை விசாாித்த உயா்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே சபாநாயகா் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீசை சபாநாயகா் பெற்றுக் கொள்ள வில்லை. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தின் சாா்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நோட்டீஸ் மீது வருகிற 3ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The case of Sasikala in jail; Notice to the Dhanapal

அடுத்த செய்தி