ஆப்நகரம்

ஆதார் கட்டாயமாக்கப்படுமா? இல்லையா? நாளை தீர்ப்பு

ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் இணைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

TNN 23 Aug 2017, 5:34 pm
ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் இணைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
Samayam Tamil the case on the aadhar card will be given verdict tomorrow
ஆதார் கட்டாயமாக்கப்படுமா? இல்லையா? நாளை தீர்ப்பு


தனிநபர் தகவல் ரகசியத் தன்மை பாதுகாப்பு என்பது குடிமகன்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வருமா என்பது குறித்து 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

ஆதார் முறை தனி நபர் தகவல் ரகசிய பாதுகாப்பை மீறுவதாக உள்ளது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரசணை நடத்தியது. இதன் இறுதித்தீர்ப்பு நாளை வெளியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனிநபர் சார்ந்த தகவல் ரகசியத்தன்மை என்பது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என ஏற்கனவே கடந்த வழக்குகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருந்தனர். ஆனால் ஆதார் முறை வருகைக்கு பின் அந்த தீர்ப்பானது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் எல்லா சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்படுவது மக்களை அதிகமாக சிரமப்படுத்துவதோடு மட்டுமல்லமால் தேவையில்லாத குழப்பங்களையும் உருவாக்குகிறது. இந்த நிலையில் நாளை வழங்கப்படும் இந்த தீர்ப்பானது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

the case on the aadhar card will be given verdict tomorrow

அடுத்த செய்தி