ஆப்நகரம்

அலங்கார ஊர்தி வழக்கு: தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jan 2022, 1:17 pm
டில்லியில் நாளை நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil madras hc


சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாட்டின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தலைநகர் டில்லி ராஜபாதையில் நடக்கும் அணிவகுப்பில், முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.

இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கான வரைபடத்துடன் விண்ணப்பித்த நிலையில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் நாளை நடக்க உள்ள அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
பயணிகளுக்கு ஷாக் நியூஸ்: ஜனவரி 31 வரை இந்த ரயில்கள் ரத்து!
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும், நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு, எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் முதல்வரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருப்பதி போறீங்களா? ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், கடைசி நேரத்த்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி