ஆப்நகரம்

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் - தமிழக அரசு தகவல்!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Samayam Tamil 7 Jul 2020, 1:41 pm
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த வழக்கை தாமான முன் வந்து விசாரித்து வரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சிபிஐ போலீசார் விசாரணைக்கு முன்னர் தடயங்கள் சாட்சிகள் அழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவுக்கு சித்த மருத்துவப் பொடி: மத்திய அரசு ரியாக்‌ஷன் என்ன?

தமிழக அரசு அறிவிக்கை


இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி