ஆப்நகரம்

கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் : இப்போவே கண்ண கட்டுதே!

ஏர்செல் – மெக்சிஸ் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

TNN 27 Sep 2017, 8:42 pm
ஏர்செல் – மெக்சிஸ் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
Samayam Tamil the cbi summons karti chidambaram to be present in october 4th
கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் : இப்போவே கண்ண கட்டுதே!


ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு, வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க சி.பி.ஐ சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை அடுத்து கார்த்தி சிதம்பரத்தின் மொத்த சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முன்தினம் முடக்கியது.

தற்போது அக்டோபர் 4 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக கார்தி சிதம்பரத்துக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

the cbi summons karti chidambaram to be present in october 4th

அடுத்த செய்தி