ஆப்நகரம்

சென்னையில் உள்ள ஒரு வீடை விடாதீங்க..! கொரோனா சோதனைக்கு மாநகராட்சி அதிரடி..!

சென்னை லிமிட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொரோனா சோதனை நடந்த போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2020, 9:34 pm
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்து விட்டது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வரிசையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆகையால் சமூகத்தில் இருந்து கொரோனா பரவுவதை தடுக்கவும், அறிகுறிகள் இருப்பதை முன் கூட்டியே தெரிந்துகொள்ளவும், சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கு நேரிடையாக சென்று சோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Samayam Tamil சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு கோப்புப்படம்


அதற்காக மாநகராட்சியிலிருந்து 16 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 75 முதல் 100 வீடுகளில் கொரோனா அறிகுறி சோதனையில் ஈடுபடுவார்கள். அதன்படி சென்னை சரகத்துக்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து அடுத்து வரும் 90 நாட்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


அந்த சோதனையில் வீட்டில் உள்ளவர்களுக்கு சளி, தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். மேலும் இந்த சோதனையில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், நாட்பட்ட நோயாளிகள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டறிந்து அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்படலாம்.

corona recovered: கோவையில் நற்செய்தி... 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமாகினர்..!

இந்த தரவுகள் அனைத்தும் கணக்கெடுப்பில் பதிவாகும். ஆகையால் சென்னை மக்கள் தயவு கூர்ந்து இதற்கு ஒத்துழைக்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி