ஆப்நகரம்

தூத்துக்குடி பேரீச்சை சாகுபடிக்கு மானியத்தை அறிவித்தார் ஆட்சியர்..!

பேரீச்சை சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு 30000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்திருக்கிறார்.

Samayam Tamil 10 Sep 2019, 8:02 pm
விவசாயிகள் பேரீச்சை சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதற்காக, தோட்டக்கலை மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளான் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக 2019 - 2020 ஆம் ஆண்டில் பேரீச்சை சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டருக்கு 30000 ரூபாய் என்ற வீதத்தில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திலும், எக்டருக்கு 30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
Samayam Tamil fsfef


புவிசார் குறியீட்டைப் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா.!
சாகுபடி முறை:

பேரீச்சையை, விதைகள் மற்றும் திசு வளர்ப்பு செடியால் மூலமாகச் சாகுபடி செய்யலாம். பொதுவாக எக்டருக்கு 175 செடிகள் என்ற விகிதத்தில் நடலாம். நல்ல மகசூல் பெற, செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்வது அவசியமாகிறது. பயிர் இழப்பைக் குறைப்பதற்காக, சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் பாய்ச்சலாம்.

முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்... ஸ்டாலின் அதிரடி

நுண்ணீர் பாசனம் அமைக்கச் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75% மானியமும், அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நன்றாகப் பராமரிக்கப்பட்ட சூழலில் சராசரியாக மரம் ஒன்றுக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை விளைச்சல் பெறலாம்.

பேரீச்சை சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே கொண்டே வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பேரீச்சை சாகுபடி செய்ய மானியமும் பெற, உழவன் செயலி மூலமாகவும், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநரையோ அல்லது தோட்டக்கலை அலுவலரையோ அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நந்தூரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி