ஆப்நகரம்

கடன் தொல்லை : குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Sep 2018, 12:46 pm
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil suicide


அம்பை அருகே உள்ள கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். திருப்பூரில் டிசைனராக வேலை பார்த்து வந்த இவர், மனைவி ரேவதி, மகன், கதிர்வேல், மகள் அம்ருதா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் நால்வரும் அவர்கள் வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

கடன் தொல்லையால் குழந்தைகள் கதிர்வேல், அமித்ராவை கொலை செய்துவிட்டு மகேந்திரன் மற்றும் ரேவதி தம்பதியினரும் தற்கொலை செய்தனர். இவர்கள், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி