ஆப்நகரம்

கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

பெங்களூர், சிலிண்டர் வெடித்த விபத்தில், ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

TNN 20 Oct 2017, 11:00 am
பெங்களூர், சிலிண்டர் வெடித்த விபத்தில், ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Samayam Tamil the cylinder blast in bangalore dies a 3 year old died after she was rescued
கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !


பெங்களூரு எஜிபுராவில் கடந்த திங்கள் கிழமை சிலிண்டர் வெடித்ததில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 7பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கட்டட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய 3 வயது குழந்தை சஞ்செனா உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் குழந்தையின் பெற்றோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இடிந்து விழுந்த கட்டிடங்களை மீட்புக் குழுவினர் கனரக எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிபாடுகளிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.

தீயணைப்புப் படையினரும், சேவைகள் அதிகாரிகளும் இடிபாடுகளை அகற்றி சஞ்சனா என்ற 3 வயதுக் குழந்தையை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட சஞ்செனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் இறந்துவிட்டதால் குழந்தையை கர்நாடக அரசே தத்தெடுத்து வளர்க்கும் என அறிவித்திருந்த நிலையில், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


the cylinder blast in bangalore dies a 3 year old died after she was rescued

அடுத்த செய்தி