ஆப்நகரம்

2ஜி வழக்கு: தீர்ப்புக்கான தேதி இன்று 2.30 மணிக்கு அறிவிப்பு !!

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

TNN 20 Sep 2017, 11:35 am
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
Samayam Tamil the date of 2g verdict date will be announced today 2 30 afternoon
2ஜி வழக்கு: தீர்ப்புக்கான தேதி இன்று 2.30 மணிக்கு அறிவிப்பு !!


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ 1,76, 000 கோடி இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக எம் .பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் தீர்ப்பின் தேதி ஆகஸ்டு 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார். ஆனால் மீண்டும் தீர்ப்பின் தேதி செப்டம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது . வழக்கின் முக்கிய ஆவணங்கள் முழுமையாக தயாராகாததால் , தீர்ப்பின் தேதியை தள்ளி வைப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவிவரும் நிலையில் , இந்த தீர்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படுமானால், அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

the date of 2g verdict date will be announced today

அடுத்த செய்தி