ஆப்நகரம்

ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்: விஜயபாஸ்கர் தான் எனக்கு சொன்னார்!

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம் விவரம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 21 Mar 2022, 1:55 pm
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
Samayam Tamil OPS


ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது அது குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என முதன்முதலில் கோரிக்கை விடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம்.

அதனாலே ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்ட போதும் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்தார் ஓபிஎஸ்.

இந்நிலையில் இன்றைய தினம் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா அண்ணன் மனைவி இளவரசியும் ஆஜராகினார்.
சசிகலா Vs டிடிவி தினகரன்: ரகசியமாய் சிரிக்கும் எடப்பாடி!
ஓபிஎஸ் அளித்த வாக்குமூலத்தில், “மெட்ரோ ரயில் நிலைய நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது நான் சொந்த ஊரில் இருந்தேன். உதவியாளர் மூலமாக தான் இந்த தகவலை அறிந்தேன்.

மருத்துவமனையில் அவருக்கு எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள், என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விஜயபாஸ்கர் மூலமாகவே அவரது சிகிச்சை விவரங்கள் குறித்து தெரிந்துகொண்டேன். ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு ஏற்பட்ட போது என்ன சிகிச்சை கொடுத்தனர் என்பது எனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.
ராஜ கண்ணப்பன் பதவி பறிபோகிறதா? ஸ்டாலின் எடுக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
இளவரசி அளித்த வாக்குமூலத்தில், “ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்த அப்போலோ மருத்துவமனைக்கு 75 நாட்களும் சென்றபோதும், ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே அவரை பார்த்தேன். 2014ஆம் ஆண்டில் சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா மன உளைச்சலில் இருந்தார். அதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அவர் உடல்நலக் குறைவுடன் இருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது, சசிகலா மட்டுமே அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி