ஆப்நகரம்

சென்னை: நள்ளிரவு 3 மணிக்கு நிகழும் கொரோனா உயிரிழப்புகள், காரணம் என்ன?

கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகள் பகல் நேரத்தைவிட இரவு நேரங்களில் நிகழ்வதற்கான காரணத்தை குறித்து ஒரு விளக்கம்...

Samayam Tamil 24 Jun 2020, 3:55 pm
சென்னை: கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் நள்ளிரவு 3 மணி அளவில் உயிரிழப்பதாக கூறும் மருத்துவர்கள், அதற்கு இரத்தத்தில் ஆக்சிஜனேற்றத்தின் பின்னடைவுதான் என தெரிவிக்கின்றனர். இந்த புரிதலினால், சிகிச்சை நெறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொரோனா நோயாளிகள் பகல் நேரத்தை விட இரவில் அடிக்கடி கண்காணிக்கப்பட்டு வருகிறார்களாம்.
Samayam Tamil corona treatment


மனித உடலில் ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸ் இருந்தால் மட்டுமே அனைத்து திசுக்களும் உயிரணுக்களும் செயல்படும். குளுக்கோஸ் ஆற்றலுக்கானது, ஆக்ஸிஜன் அதை மாற்றி, அனைத்து உயிரணுக்களுக்கும் எடுத்துச் செல்கிறது.

ஆக்சிஜனுக்கு ஹீமோகுளோபின் அவசியம்

சில நேரங்களில் நம்மிடம் குறைவான ஹீமோகுளோபின் (13 கிராமுக்கு குறைவாக) இருந்தால், நுரையீரல் சுற்றுச்சூழலில் இருந்து அதிக ஆக்ஸிஜனைக் கொடுத்தாலும், அது எல்லா உயிரணுக்களுக்கும் கொண்டு செல்லப்படுவதில்லை. குறைந்தபட்ச தேவை 13 கிராம் ஹீமோகுளோபின் ஆகும். உதாரணமாக, குறைந்த ஹீமோகுளோபின் கொண்ட இரத்த சோகை நோயாளிகளின் ஹீமோகுளோபின் அளவு 6 கிராம் என்றால், அவர்களுக்கு ஆக்சிஜன் சுமந்து செல்லும் திறன் 13 கிராம் கொண்டவர்களை விட மிகக் குறைவாக இருக்கும்.

ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு இது சாத்தியமில்லை. ஒருவருக்கு கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி, ஆக்ஸிஜனை உட்கொள்வதைக் குறைப்பதால், போதுமான ஹீமோகுளோபின் இருந்தாலும் கூட, உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்த முடியாது.

சிம்பாதெடிக் டோன்

சிம்பாதெடிக் டோன் என்பது அனுதாப நரம்பு மண்டலம் என அழைக்கப்படுகிறது. இது முதுகெலும்பு நரம்புகளால் உள் உறுப்புகளை மூளைக்கு இணைக்கிறது. இது தூண்டப்படும்போது, இதயத் துடிப்பையும், தசைகளுக்கு இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். இதனால் ஒருவருடைய மனநிலை சீராக இருக்கும். சாதாரணமாக இதய துடிப்பு அளவீடானது 78 ஆகும், இது தூக்கத்தின் போது குறையும். அதேபோல 20 ஆக இருக்கும் சுவாச வீதம் 15 ஆக குறையும். இது சாதாரண உடலியல் செயல்முறை. இது நடக்கவில்லை என்றால், ஆக்சிஜன் இயக்கம் குறைந்து ஒருவரால் சீராக உறங்க முடியாது.

ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்கெனவே ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் வீதம் குறைந்திருக்கும். இதனால் தூக்கத்தின் போது, இயற்கையான உடலியல் நிகழ்வுகள் காரணமாக இதயத் துடிப்பு, சுவாச வீதத்தில் மேலும் குறைவு காணப்படுகிறது.

சிக்கலான நோயாளிகளால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. செறிவூட்டலில் வீழ்ச்சி, அனுதாப தொனியில் வீழ்ச்சி (Sympathetic tone), ஹைப்போக்ஸியா (குறைந்த ஆக்ஸிஜன் செறிவு) ஆகியவை ஏற்படுகிறது. இதுதான் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் அதிக அளவு கொரோனா நோயாளிகள் இறப்புகளுக்கு காரணமாகிறது. இதைத்தான் எங்கள் ஐ.சி.யுகளில் கவனித்திருக்கிறோம் என கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பேராசிரியர் டாக். பரந்தாமன் விளக்கியுள்ளதாக ஆங்கில இணையதள செய்தி ஒன்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி