ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம் : 25 தேதி விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், வரும் 25-ம் தேதி விசாரணையைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN & Agencies 21 Oct 2017, 10:02 am
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், வரும் 25-ம் தேதி விசாரணையைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil the enquiry commission about death of jayalalithaa to start enquiry on 25 october
ஜெயலலிதா மரணம் : 25 தேதி விசாரணை


கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அதிக மர்மங்கள் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், 'ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினர் . ஆனால், இந்த விசாரணை கமிஷன், அறிவிப்பு நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவந்தன.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த விசாரணை கமிஷனின் விசாரணை, இன்னும் மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், வரும் 25-ம் தேதியிலிருந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்த விசாரணை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

the enquiry commission about death of jayalalithaa to start enquiry on 25 october

அடுத்த செய்தி