தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் மருத்துவ உபகரணங்களும் தேவையான அளவுக்கு தமிழக அரசிடம் கையிருப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையை வேகமாக நடத்தி முடிக்க ஏதுவாக இருக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் மூன்று நாளுக்கு முன்புதான் தமிழகம் வந்தடைந்தன.
அதுவும் தமிழக அரசு நேரடியாக ஆர்டர் செய்ததில் 24 ஆயிரம் கருவிகள் முதற்கட்டமாக கிடைத்துள்ளன. நேற்று சேலம் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில், தமிழக அரசுக்கு மத்திய அரசு 12 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்குகிறது.
ஆனால் அது போதாது. கூடுதலாக 50 ஆயிரம் கருவிகள் வேண்டுமென கேட்டுள்ளோம் என்று கூறினார். ஆனால் மத்திய அரசிடம் 12 ஆயிரம் கருவிகள் மட்டுமே வந்துள்ள நிலையில், யூனியன் பிரதேசமாக இருக்கும் டெல்லிக்கு 42 ஆயிரம் கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,767 ஆகும்.
தொழிற்சாலைகள் இயங்குவதை குறித்து 20ம் தேதி அறிவிப்பு - சேலத்தில் முதல்வர் பேட்டி
தமிழகத்தில் 1,323 ஆக உள்ளது. இரண்டுக்கும் மிக பெரிய வித்தியாசம் இல்லை. அதே சமயம் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து டெல்லியும், தமிழகமும் முதல் மூன்று இடத்தில் உள்ளது. ஆகையால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஓன்றன்பி ஒன்றாக டெல்லியும், தமிழகமும் இருக்கும் சூழலில் தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு நிவாரணங்களை வழங்குவதிலும், மருத்துவ உபகரணங்களை கொடுப்பதிலும் பூர்த்தியற்ற நிலையில்தான் உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
தற்போது தமிழகத்துக்கு கிடைக்கபெற்றுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் சேலம் மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகிறது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் 18 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த கருவிகள் மூலம் 30 நிமிடத்துக்குள் முடிவை தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் தமிழக அரசு நேரடியாக ஆர்டர் செய்ததில் 24 ஆயிரம் கருவிகள் முதற்கட்டமாக கிடைத்துள்ளன. நேற்று சேலம் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில், தமிழக அரசுக்கு மத்திய அரசு 12 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்குகிறது.
ஆனால் அது போதாது. கூடுதலாக 50 ஆயிரம் கருவிகள் வேண்டுமென கேட்டுள்ளோம் என்று கூறினார். ஆனால் மத்திய அரசிடம் 12 ஆயிரம் கருவிகள் மட்டுமே வந்துள்ள நிலையில், யூனியன் பிரதேசமாக இருக்கும் டெல்லிக்கு 42 ஆயிரம் கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,767 ஆகும்.
தொழிற்சாலைகள் இயங்குவதை குறித்து 20ம் தேதி அறிவிப்பு - சேலத்தில் முதல்வர் பேட்டி
தமிழகத்தில் 1,323 ஆக உள்ளது. இரண்டுக்கும் மிக பெரிய வித்தியாசம் இல்லை. அதே சமயம் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து டெல்லியும், தமிழகமும் முதல் மூன்று இடத்தில் உள்ளது. ஆகையால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஓன்றன்பி ஒன்றாக டெல்லியும், தமிழகமும் இருக்கும் சூழலில் தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு நிவாரணங்களை வழங்குவதிலும், மருத்துவ உபகரணங்களை கொடுப்பதிலும் பூர்த்தியற்ற நிலையில்தான் உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
தற்போது தமிழகத்துக்கு கிடைக்கபெற்றுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் சேலம் மருத்துவமனையில் பரிசோதனை நடந்து வருகிறது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் 18 பேருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த கருவிகள் மூலம் 30 நிமிடத்துக்குள் முடிவை தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.