ஆப்நகரம்

லைசன்ஸ் இருந்தாலும் மீண்டும் 8 போடணுமா.? வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு.!

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 5 ஆண்டுகளாக இருந்த அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முறை, புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி கொண்டுவரப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Sep 2019, 5:16 pm
புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் செப்.1 இல் இருந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதான அபராத தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
Samayam Tamil 5



நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக்கு விதிகளின் படி லைசன்ஸ் இல்லாமல் பயணிப்பது, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, ஆவணம் இல்லாமல் மற்றும் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவது, அவசர ஊர்திகளுக்கு வழி விடாமல் செல்லுவது போன்ற குற்ற நடவடிக்கைகளுக்கு இந்த திருத்தப்பட்ட அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க 5 ஆண்டுகளாக இருந்த அவகாசம் ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் 8 போட்டுக் காட்ட வேண்டும். இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த செய்தி