ஆப்நகரம்

எஸ்.பி.பி. உடல் நாளை நல்லடக்கம்: பொது மக்கள் அஞ்சலி செலுத்த தடையில்லை!

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 25 Sep 2020, 5:02 pm
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிசையின் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து அவர் மீண்டதால் அவரது ரசிகர்கள் ஆறுதல்டைந்தனர். இதைத்தொடர்ந்து, நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். அதன் தொடா்ச்சியாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
Samayam Tamil எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இதனிடையே, கடந்த புதன்கிழமை மாலை அவரது உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் அவர் காலமானார். இந்த தகவலை அவரது மகன் சரண் உறுதிபடுத்தினார்.

உயிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக எஸ்.பி.பி.யின் உயிர் பிரிந்தது என எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தி தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்ட எம்ஜிஎம் மருத்துவமனையின் மருத்துவர், “எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை” என்றார்.

தமிழின் குரல்வளை நெரிந்தது: பாஜக நிர்வாகி சர்ச்சை ட்வீட்!

இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உடல் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் இருந்து அவசரஊர்தி வாகனம் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

தொடர்ந்து, நாளை காலை 11 மணிக்கு செங்குன்றத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமரை பக்கம் பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது

அடுத்த செய்தி