ஆப்நகரம்

எம்.எல்.ஏ.வின் காலில் விழுவது போல் நடித்து கண்ணத்தில் அறைந்த பெண்!

திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2018, 11:07 am
திருவண்ணாமலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil the girl slapped admk mla was arrested
எம்.எல்.ஏ.வின் காலில் விழுவது போல் நடித்து கண்ணத்தில் அறைந்த பெண்!


கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ பன்னீர் செல்வம். இவர் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போளூர் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த வசந்தமணி என்ற பெண், பன்னீர் செல்வத்தின் காலில் விழுவது நடித்து, கண்ணத்தில் ஓங்கி அறைந்தார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன்பிறகு, எம்.எல்.ஏ.வின் கண்ணத்தில் அறைந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த எம்.எல்.ஏ பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார். இதே போல் போளூர் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.பன்னீர் செல்வத்தின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி