ஆப்நகரம்

தமிழகத்தில் மாணவர் சேர்க்கை எப்போது? அரசு அதிரடி அறிவிப்பு!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் தேதியை உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 21 Aug 2020, 5:00 pm
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகின. அந்த பொதுத்தேர்வில் 94.80 சதவீத மாணவிகளும், 89 .41 சதவீத மாணவிகளும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Samayam Tamil arts and science admission


தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்போது 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 92,000 சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு தோராயமாக சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

பொதுவாக மேற்கண்ட கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிப்பார்கள். இதற்கு பலமுறை மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கின்ற காரணத்தினால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி புதிய முயற்ச்சியாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in, www.tndceonline.org என்கிற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் நடைபெற்றன. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், புது நடைமுறையாக மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் வர அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்ல ஈஸி இ-பாஸ், சிக்கலில் மாட்டிக் கொண்ட அரசு!

மேலும், இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 044-22351014, 044-2231015 என்ற கட்டுப்பாட்டு அறையை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி