ஆப்நகரம்

தமிழ்நாட்டில் இன்று 6,162 பேருக்கு தொற்று..!

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2021, 8:50 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,49,577 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தில் தற்போது 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 372 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 530789 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 519128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8131 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 756 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 215808 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 206592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1968 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 155325 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 150836 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2331 பேர் பலியாகியுள்ளனர்.

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு: தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,67,268 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,10,18,415 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 9,046 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 23,67,831 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 155 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 31,901 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி