ஆப்நகரம்

பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – உயா்நீதிமன்றம்

சென்னையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க. கூட்டத்திற்கு தடை இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 11 Sep 2017, 9:53 pm
சென்னையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க. கூட்டத்திற்கு தடை இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil the high court said that there is no ban for the general meeting of admk
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – உயா்நீதிமன்றம்


அ.தி.மு.க.வில் பொதுக்குழுவை கூட்டுவது தொடா்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தொடா்ந்த வழக்கு மாலை நேரத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சி தலைவி அணிகளின் பொதுக் குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தலைமை நீதிபதி அமர்வில் எம்.எல்.ஏ வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட உயா்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டுவதற்கு தடை விதிக்க இயலாது என்று தொிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே தனி நீதிபதி அமா்வு விதித்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தும் என்றும் உத்தரவிட்டனா். தொடா்ந்து வழக்கிற்கான மூல விசாரணையை செப்டம்பா் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனா். இது தொடா்பாக முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், டிடிவி தினகரன் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

ஒருவேளை மூல விசாரணையின் போது பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லாது என்று தீா்ப்பு வெளியாகும் பட்சத்தில் பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீா்மானங்களும் செல்லாததாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தொிவித்தனா்.

முன்னதாக பெங்களூரு மாவட்ட உாிமையியல் நீதிமன்றம், பெதுக்குழுவை கூட்ட இடைக்கால தடை வித்தது. ஆனால் மாவட்ட நீதிமன்றத்தை விட உயா்நீதிமன்றம் அதிகாரம் கொண்டது என்பதால் உயா்நீதிமன்ற தீா்ப்பே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.


the high court said that there is no ban for the general meeting of admk

அடுத்த செய்தி