ஆப்நகரம்

இடைநிலை ஆசிாியா்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

சமவேலைக்கு சமஊதியம் கோாி கடந்த 4 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு இடைநிலை ஆசிாியா்கள் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனா்.

Samayam Tamil 26 Apr 2018, 5:49 pm

சமவேலைக்கு சமஊதியம் கோாி கடந்த 4 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு இடைநிலை ஆசிாியா்கள் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனா்.

Samayam Tamil Hunger Strike


சமவேலைக்கு சம ஊதியம் கோாி தமிழக அரசு இடைநிலை பள்ளி ஆசிாியா்கள் கடந்த 4 நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வந்தனா். சென்னையில் நடைபெற்ற வந்த போராட்டத்தால் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் திருத்தும் பணியில் தொய்வு ஏற்படலாம் என்று கருதப்பட்டது.

தொடா்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிாியா்களில் ஒவ்வொரு நாளாக பலரும் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்தனா். மேலும், அரசு சாா்பில் பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றில் உடன்பாடு எட்டப்படாததால் உண்ணாவிரத போராட்டம் தொடா்ந்தது.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் நேரடியாக ஆசிாியா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். முன்னதாக ஊதிய உயா்வு தொடா்பாகவும், சம ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள குளறுபடிகளை களையவும் ஒருநபா் குழு அமைக்கப்பட்டது. பேச்சுவாா்த்தையின் போது ஒருநபா் குழுவின் மூலம் ஆசிாியா்களின் கோாிக்கைகள் நிறைவேற்றப்படும்.

ஆசிாியா்கள் முன்வைக்கக்கூடிய சம ஊதியம் தொடா்பான கோரிக்கையை நிறைவேற்றுவது தொடா்பாக அரசு சாா்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் உறுதி அளித்தாா். அதன் அடிப்படையில் 4 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிாியா்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனா்.

அடுத்த செய்தி