ஆப்நகரம்

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்தவர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்தவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 21 Oct 2020, 9:01 pm
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்த விக்கெட்டுகளை அடிப்படையாக கொண்டு 800 என்ற தலைப்பில் படமாக்கப் போவதாகவும், அதில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. சிங்கள ஆதரவாளராக இருந்து ஈழ தமிழர்களை எதிர்த்த முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
Samayam Tamil விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி


இதையடுத்து, படத்தை கைவிடும்படி முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் சேதுபதிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே, விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் மர்ம நபர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

Vijay: ரெடியாகும் தனிக்கட்சி; நடிகர் விஜய்யின் அடுத்த பிளான் - எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு!

அதன்பேரில், அவதூறாக பேசுதல் ஆபாசமான கருத்துக்களை பதிவிடுதல் , தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற மூன்று பிரிவின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அச்சுறுத்தல்


இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் விடுத்தவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி