ஆப்நகரம்

நகை தர மறுத்த பேராசிரியையை கொலை செய்த கணவா்

தொழில் தொடங்க நகையை தர மறுத்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொன்றதாக கணவர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

TOI Contributor 23 Aug 2017, 10:06 pm
தொழில் தொடங்க நகையை தர மறுத்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொன்றதாக கணவர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Samayam Tamil the killing of the professor who refused the jewelry
நகை தர மறுத்த பேராசிரியையை கொலை செய்த கணவா்


கோபி அருகே உள்ள நம்பியூரை சேர்ந்த மஞ்சுளா கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை செய்து வந்தாா். இவா் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் லிங்கேஷ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பத்து மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னா் மஞ்சுளா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து மஞ்சுளாவின் தாயார் தவமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் கடத்தூர் காவல் துறையினா் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் வயரால் கழுத்தை நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மஞ்சுளாவின் கணவர் லிங்கேஷ்வரன் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் லிங்கேஷ்வரன் குருமந்தூர் வி.ஏ.ஓ., ராம்ஜியிடம் நேற்றுமுன்தினம் சரணடைந்தார். அவரை கடத்தூர் காவல் துறையினாிடம் வி.ஏ.ஓ., ஒப்படைத்தார். லிங்கேஷ்வரனை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது லிங்கேஷ் கூறுகையில், திருமணமான சில மாதத்தில் இருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனக்கு மென்பொருள் நிறுவனத்தில் போதிய வருமானம் இல்லாததால் போர்வெல் வண்டி வாங்கி தொழில் செய்ய நினைத்தேன். இதற்காக மனைவியின் நகையை கேட்டேன். ஆனால் அவர் நகையை தர மறுத்துவிட்டார். மேலும் நகையை பெற்றோர் வீட்டில் வைத்துவிட்டார்.

சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் வயரால் மஞ்சுளாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டேன். கொலையை மறைக்க தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அனைவரிடமும் கூறினேன். ஆனால் காவல் துறையினர் கண்டுபிடித்துவிட்டனர். எனவே சரண் அடைந்தேன் என்றாா்.

The killing of the professor who refused the Jewelry

அடுத்த செய்தி