ஆப்நகரம்

கட்சியின் தலைவரே விலகல்: என்னங்க எஸ்ஏசி இப்படி பண்ணிட்டாங்க!

விஜய் தந்தை ஆரம்பித்த கட்சியில் தலைவரே பதவி விலகியுள்ளார்.

Samayam Tamil 19 Nov 2020, 9:17 am
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு அடுத்த தலைமுறை நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது கவனம் பெற்றது. அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு இருக்கும் என கட்சியை பதிவு செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி நினைத்திருக்கக்கூடும்.
Samayam Tamil vijay


ஆனால் கட்சிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை, எனது புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பேன், எனது ரசிகர்கள் அந்தக் கட்சிக்கு போக வேண்டாம் என எஸ்ஏசிக்கே அதிர்ச்சி கொடுத்தார் விஜய்.

விஜய் வெளியிட்ட அறிக்கை எஸ்ஏசியை கலவரமடையச் செய்திருக்கும் நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பொருளாளராக ஷோபா பெயரே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அஷோஷியன் ஆரம்பிப்பதாக கூறி என்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டார் என எஸ்ஏசி மீது குற்றம் சாட்டினார்.

TN Schools Reopen: பொதுத் தேர்வு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

பொருளாளர் கட்சியிலிருந்து விலகிய நிலையில் தற்போது தலைவரும் பதவி விலகியுள்ளார். பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா என்பவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அக்கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அபராதத் தொகை செலுத்தினார் சசிகலா: விரைவில் விடுதலை!

தற்போது அவரும் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது எஸ்ஏசி தரப்பை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

அடுத்த செய்தி