ஆப்நகரம்

மாவட்ட நீதிமன்றத்தில் காலதாமதமாகும் வழக்குகள்; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் முடிவு வைத்தது.

Samayam Tamil 21 Jan 2023, 5:16 pm
மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது என தெரிவித்துள்ளது.
Samayam Tamil chennai high court


கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் குறித்து அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையின்போது காலதமாதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கை காலதாமதம் ஆக்குவதற்காக வழக்கை தள்ளிவைக்க கோரி மனுதாரரோ அல்லது எதிர் மனுதாரரோ நீதிமன்றத்தில் கூறினால் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கவும் என தெரிவித்தார். காலம் தாமதம் ஆக்குவதால் பல வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் கூட நிலுவையில் இருப்பதாக சுட்டிகாட்டி உள்ளார்.

மேலும், கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு சில வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

விரைந்து விசாரணையை முடிக்கும் சூழல் இருந்தும், காலதாமதம் ஆக்குவது தெரிய வந்தால் மட்டுமே உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி