ஆப்நகரம்

சரக்கு கிடைக்காமல் வார்னிஷை குடித்தவர் பலி: சென்னை அருகே பரிதாபம்!

கொரோனா உயிரிழப்புகளுக்கு இடையே, மது கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும், போதைக்காக எதோ ஒன்றை குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது

Samayam Tamil 5 Apr 2020, 3:11 pm
சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கிடைக்காததால் போதைக்காக குளிர்பானத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் வார்னிஷை கலந்து குடித்த கார் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் அதே வேளையில், மது கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும், போதைக்காக எதோ ஒன்றை குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே இயங்கும் எனவும், அத்தியாவசிய தேவைகளற்ற கடைகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மேலும் ஒரு ஷாக்; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!

குறிப்பாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்து பார்களும் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மது போதைக்கு அடிமையாகியுள்ள ‘குடி’ மகன்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். காவல்துறையின் கிடுக்கிப்பிடிகளுக்கு இடையே கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் சரக்குகளை வாங்கி அடித்து வரும் போதை ஆசாமிகள், சில நேரங்களில் ஆல்கஹால் இருக்கும் சானிட்டைசர்களை குடித்து மாண்டு விடுகின்றனர்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷன் கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மது கிடைக்காததால் போதைக்காக குளிர்பானத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் வார்னிஷை கலந்து குடித்த செங்கல்பட்டை சேர்ந்த கார் ஓட்டுநர் சிவராமன் என்பவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டிங்களா? நேரத்தை குறைத்த தமிழக அரசு!

அண்டை மாநிலமான கேரளாவில் மது கிடைக்காமல் தற்கொலைகள் அதிகரித்ததால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மது வழங்கலாம் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். ஆனால், அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி