ஆப்நகரம்

எனக்கே தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது கடந்தாட்சியின் நிர்வாக மேலாண்மை - பிடிஆர் வருத்தம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

Samayam Tamil 9 Aug 2021, 6:42 pm
120 பக்கங்கள் கொண்ட நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், '' பல்வேறு மாநிலங்களின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்தோம்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்த வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.1 லட்சம் கோடி தவறான செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் கட்சியின் தத்துவம், குணம் ஆகியவற்றை தெரிவிக்கவும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியின் அடிப்படையிலும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

தமிழக அரசுப் பேருந்தில் பயணமா? பயணிகளுக்கு இப்படியொரு சிக்கல்!

முறைகேடுகளை திருத்த முடியும் என்ற அடிப்படையில் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம் . தவறான நிர்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி வேறு இடங்களுக்குச் சென்றுள்ளது.

சிஸ்டமே தவறாக இருக்கிறது. நானே தன்னம்பிக்கையை இழக்கும் அளவுக்கு கடந்த ஆட்சியில் நிர்வாக மேலாண்மை இருந்துள்ளது'' என இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அடுத்த செய்தி