ஆப்நகரம்

அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த சலவை தொழிலாளி

திருச்சி மாவட்டம் துறையூா் அரசு மருத்துவமனையில் சலவை தொழிலாளி ஒருவா் பிரேத பரிசோதனை செய்யும் காட்சி இணையதளங்களில் வலம் வந்து பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 May 2018, 3:41 pm
திருச்சி மாவட்டம் துறையூா் அரசு மருத்துவமனையில் சலவை தொழிலாளி ஒருவா் பிரேத பரிசோதனை செய்யும் காட்சி இணையதளங்களில் வலம் வந்து பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Trichy


திருச்சி மாவட்டம் துறையூா் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கைலி அணிந்த நபா் ஒருவா் பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ காட்சி இணைதளத்தில் வெளியானது. இது தொடா்பாக நடைபெற்ற விசாரணையில், துறையூர் மருத்துவமனையில் 3 மாத ஒப்பந்த கால அடிப்படையில் சலவை தொழிலாளியாக வேலைபாா்த்து வரும் வீரமணிதான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளாா் என்பது தொியவந்துள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை உயா் அதிகாாிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று சிகிச்சைகளிலும் அலட்சியம் காட்டக் கூடாது எனவும், அரசு மருத்துவமனை ஊழியா்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும், சிகிச்சைக்கான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

அடுத்த செய்தி