ஆப்நகரம்

இன்றோடு முடியும் கத்திரி வெயில்! விரைவில் பருவமழை

தமிழகத்தை ஒரு மாதம் வாட்டி வதைத்த கத்திரிவெயில், இன்றோடு முடிவடையும் நிலையில், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 28 May 2018, 12:58 pm
தமிழகத்தை ஒரு மாதம் வாட்டி வதைத்த கத்திரிவெயில், இன்றோடு முடிவடையும் நிலையில், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil metrology




தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. இருந்த போதிலும், அதற்கு முன்னே இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரத்தின் வெப்பம் தாங்காத மக்கள் தர்பூசணி, கிர்ணி பழம், குளிர்பானங்கள் குடித்து உயிர்பிழைத்து வந்தனர். சிறிது வசதி படைத்தோர் ஊட்டி, கொடைக்கானல் என்று மலைபிரதேச சுற்றுலா தளங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.இதனிடையே தென்மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து, மக்களுக்கு உற்சாகம் கொடுத்தது.

இந்நிலையில், ஒரு மாதமாக தமிழக மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூன் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தென்கிழக்கு அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்படும் வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி