ஆப்நகரம்

’அதிமுக இணைப்பால் பலருக்கு எரிச்சல்’ ஓபிஎஸ் அதிரடி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகிலுள்ள பஞ்சட்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் இரு அணிகள் இணைந்தது பலருக்கு எரிச்சலாக உள்ளது என்று கூறினார்.

TNN 3 Sep 2017, 11:18 pm
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகிலுள்ள பஞ்சட்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் இரு அணிகள் இணைந்தது பலருக்கு எரிச்சலாக உள்ளது என்று கூறினார்.
Samayam Tamil the mgr function the speech of o panneerselvam
’அதிமுக இணைப்பால் பலருக்கு எரிச்சல்’ ஓபிஎஸ் அதிரடி


திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க. ஆட்சியே காரணம். தொழிற்சாலைகள், ஏரிகள், கல்விக்கூடங்கள் நிறைந்த மாவட்டமாக திருவள்ளூர் திகழ்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஏரி உள்ள மாவட்டம் திருவள்ளூர்.
திருவள்ளூர் தொழிற்சாலை மற்றும் கல்வி மாவட்டமாக திகழ காரணமானவர் ஜெயலலிதா. 27 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க துடிக்கிறார்கள், அ.தி.மு.க. ஆட்சியை எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது. என்று முதல்வர் கூறினார்

இதைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், இரட்டை இலையை மீட்டெடுப்போம். அதிமுக அணிகள் இணைப்பு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The mgr function the speech of o panneerselvam

அடுத்த செய்தி