ஆப்நகரம்

ராணுவ வீரரின் மரணம் அவரது தந்தைக்கே தெரியாது!குடும்பத்தினர் உருக்கம்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிர் ந்த்த தமிழக வீரர் இளயராஜாவின் இறப்பு செய்தி அவரது தந்தைக்கே இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

TNN 14 Aug 2017, 7:08 pm
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிர் ந்த்த தமிழக வீரர் இளயராஜாவின் இறப்பு செய்தி அவரது தந்தைக்கே இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
Samayam Tamil the military man death was not informed to his father
ராணுவ வீரரின் மரணம் அவரது தந்தைக்கே தெரியாது!குடும்பத்தினர் உருக்கம்


ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷோஃபியான் மாவட்டத்தின் ஜைனாபோரா பகுதியில் அவ்னீரா கிராமத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, இளயராஜா (25), கவாய் சுமேத் வாமன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர்.

மேலும் இளயராஜாவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் கண்டணிக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவரது தந்தை வேலை தேடுவதற்காக கோயம்புத்தூர் சென்றிருக்கிறார். இவரிடம் செல்போன் இல்லாததால் அவருக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை . மேலும் அவரின் மகன் மறைவு அவரை அதிகமாக பாதிக்கும் என்று உறவினர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்னர்.

the military man death was not informed to his father

அடுத்த செய்தி