ஆப்நகரம்

ஒன்னுல ரெண்டுல்ல மொத்தம் மூணு புயல் வருமாம் : நார்வே வானிலை மையம்

செவ்வாய்க்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , நவம்பர் மாதத்திற்குள் மூன்று புயல் வரை தமிழகத்தை தாக்கும் என்று நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 2 Nov 2017, 4:57 pm
செவ்வாய்க்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் , நவம்பர் மாதத்திற்குள் மூன்று புயல் வரை தமிழகத்தை தாக்கும் என்று நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil the norway whether station says that 3 hurricane will hit tamil nadu
ஒன்னுல ரெண்டுல்ல மொத்தம் மூணு புயல் வருமாம் : நார்வே வானிலை மையம்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதலே வெளுத்து வாங்கிய மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
ஆனால் நார்வே வானிலை மையமோ வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அதுவும் லேசானது முதல் மிதமானது வரைதான் மழை பெய்யும் என்றும் நார்வே வாலை மையம் கூறியுள்ளது. ஆ
அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வரும் 8 ஆம் தேதி புதன்கிழமை முதல் 10ஆம் தேதி வெள்ளிக் கிழமை வரை மழைக்கு வாய்ப்பில்லை என்றும் மேகமூட்டம் வேண்டுமானால் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நவம்பர் மாதம் வரை மூன்று புயல் தமிழகத்தை தாக்க காத்தித்திருப்பதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி