ஆப்நகரம்

பள்ளிகள் திறப்புக்கு வாய்ப்பில்லை? அதிர்ச்சியளிக்கும் கள நிலவரம்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது மேலும் தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 16 Jul 2021, 9:20 am
கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் கல்வி கற்றனர்.
Samayam Tamil TN School Reopen


9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சில வாரங்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்துகொண்டனர். அதற்குள் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவியதைத் தொடர்ந்து மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பிற வகுப்பு மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளின் பக்கம் செல்லவே முடியவில்லை.
அடுத்த கட்ட ஊரடங்கு: பள்ளிகள், திரையரங்குகளுக்கு அனுமதியா? ஸ்டாலின் ஆலோசனை!
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விரைவில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்று (ஜூலை 16) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அம்மாநில அரசு அறிவித்தது.

இதற்கு முக்கிய காரணம் அம்மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தான். அதாவது கொரோனா மூன்றாவது அலை பெரியவர்களைவிட சிறுவர், சிறுமிகளைத்தான் அதிகம் பாதிக்கும் என கூறப்படுகிறது. இதற்காகவே தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிடவில்லை.

இந்நிலையில் புதுச்சேரியில் இரு நாள்களில் 19 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒரு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 13 பேர். பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெ.நினைவிடம் கிளம்பிய சசிகலா: இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கா மேடம்?இரண்டாவது அலையே இன்னும் முழுதாக ஓயாத நிலையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டு, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து, கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, பள்ளிகள், விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி