ஆப்நகரம்

சுபஸ்ரீ மரணம்: 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றத்தில் தந்தை வழக்கு.!

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Samayam Tamil 9 Oct 2019, 6:16 pm
கடந்த மாதம் 12 ஆம் தேதி சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், நிலைதடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ, தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை 12 நாட்கள் கழித்து கைது செய்தது.
Samayam Tamil 7


இச்சூழலில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகளின் உயிரிழப்பு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காததால் தான் தனது ஒரே மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, விபத்து தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினார். மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி